பாடல்: சுப்பிரமணிய பாரதி
இசை: தினா
பாடியவர்: மாலதி
கண்ணன் -- என் காதலன்
காட்டிலே தேடுதல்
பல்லவி
திக்குத் தெரியாத காட்டில் -- உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.
சரணம் 1
மிக்க நலமுடைய மரங்கள் -- பல
விந்தைச் சுவையுடைய கனிகள் -- எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள் -- அங்குப்
பாடி நகர்ந்துவரு நதிகள்
நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள் -- எங்கும்
நீளக் கிடக்கு மலைக் கடல்கள் -- மதி
வஞ்சித் திடுமகழிச் சுனைகள் -- முட்கள்
மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள் -- ஒரு
... திக்குத்
சரணம் 2
ஆசை பெறவிழிக்கும் மான்கள் -- உள்ளம்
அஞ்சக் குரல்பழகும் புலிகள் -- நல்ல
நேசக் கவிதைசொல்லும் பறவை -- அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு
தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் -- அதன்
சத்தத்தினிற் கலங்கும் யானை -- அதன்
முன்னின் றோடுமிள மான்கள் -- இவை
முட்டா தயல்பதுங்குத் தவளை -- ஒரு
... திக்குத்
view more