பாடல்: சுப்பிரமணிய பாரதி
இசை: தினா
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்தர்
சந்திரமதி பாட்டு
பச்சைக் குழந்தையடி -- கண்ணிற்
பாவை யடி சந்திரமதி;
இச்சைக் கினிய மது -- என்றன்
இருவிழிக்குத் தே நிலவு.
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே -- நல்ல
நாகமணி யுள்ள தென்பார்;
துச்சப்படு நெஞ்சிலே -- நின்றன்
சோதி வளரு தடீ.
பச்சைக்...
பேச்சுக் கிடமேதடி -- நீ
பெண்குலத்தின் வெற்றியடி;
ஆச்சர்ய மாயையடி -- என்றன்
ஆசைக் குமரியடி.
நீச்சு நிலை கடந்த -- வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர் போல்;
தீச்சுடரை வென்ற வொளி -- கொண்ட
தேவி நினை விழந்தே னடி.
பச்சைக்...
நீலக் கடலினிலே -- நின்றன்
நீண்ட குழல் தோன்றுதடி;
கோல மதியினிலே -- நின்றன்
குளிர்ந்த முகங் காணுதடி.
ஞால வெளியினிலே -- நின்றன்
ஞானவொளி வீசுதடி;
கால நடையினிலே -- நின்றன்
காதல் விளங்குதடி.
பச்சைக்...
view more